Friday, December 16, 2011

வேகம்

இந்த வேகத்தால் நாம் கண்டதென்ன....
கடந்த 13 .12 .2011 அன்று வடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் இடம்பெற்ற மோசமான கோர விபத்து கண்களை நெருட வைக்கிறது 21 வயதான இரு வாலிபர்களின் வாழ்கையை பறித்தது தன் மிக கொடுமை 

நெருக்கடியை குறைக்க அகலிக்கப்பட்ட வீதிகள் நம் வரைமுறையற்ற வேகங்களால் மயானங்களாகின்றன
ஓரிரு நிமிடத்தை சேமிக்க எண்ணி ஒரு வாழ்க்கை பறிபோனது தான் பரிதாபம்
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வதில்லை
ஆனாலும் இத்தகைய சம்பவங்கள் இனியும் நடக்காது பார்த்து கொள்ள வேண்டியது அவர் அவர் கைகளில் உள்ளது  
பெறுமதி மிக்க இந்த மனித பிறவி எடுத்த நாம் அதனை தேவையற்ற வேகத்தால் பாழடித்து நமக்கும் நம் சார்ந்தவர்களுக்கும் துன்பத்தை தருவதை தவிர்ப்போம்
அத்துடன் இறந்து போன சக நண்பன் பார்த்தீபனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் ....

2 comments: