Friday, December 23, 2011

y this கொலைவெறி .....

இப்போது சின்னஞ்சிறிய குழந்தை கூட இசைக்கும் பாடல் y this கொலைவெறி  மூணு படத்தில் தனுஸ் பாடிய இந்த பாடல் தான் இப்போது ஹிட் ஆக ஓடி கொண்டிருகிறது இன்று எங்கு சென்றாலும் இந்த பாடலை பற்றி கதைகாதவர்களை அருமையாகத்தான் காண  முடிகிறது

ஆனால் இத்தகைய மாற்றத்தை ஒரு  தனுஸ் ரசிகனாக ஆதரித்தாலும் ஒரு கலை ரசிகனாக ௭திர்கிறேன்
ஆரம்பத்தில் இயக்குனர்கள் நடிகர்களாக மெல்ல மெல்ல கால் பதித்தார்கள் அது ஆரம்பத்தில் சற்றே சிறப்பாக இருந்தாலும் காலம் செல்ல செல்ல கேலிக்கூத்தாக உருப்பெற்றது நாம் அறிந்ததே சிறந்த உதாரணமாக சுந்தர்.c யை குறிப்பிடலாம் ஆரம்பத்தில் சாதாரணமாக தொடக்கி ஒரு action hero ஆக தன்னை காட்ட எண்ணி படம் என்ற பெயரில் நமீதா உடன் கும்மாளம் போட்டது அனைவரும் அறிந்ததே

இதே போல comadion hero   ஆன கதையும் அறிந்ததே ஒரு படம் hero ஆக நடித்தால் போதும் என நினைத்து புலிகேசி நடித்த வடிவேலு அதன் வெற்றியை தொடர்ந்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் நடித்து படுதோல்வி அடைந்ததும் அறிந்ததே

அதே போல ராஜேந்தரின் சீமந்த புதல்வன் சிம்பு பலதுறைகளில் தன்னை காட்டபோய் அத்தனை துறைகளையும் கழங்கபடுத்தியதும் ஊர் அறிந்ததே

நடிகர்கள் பாடகூடாது இயக்குனர் நடிக்க கூடாது என்று நான் குறிப்பிடவில்லை ஆனால் அதன் பாதிப்புகள் இன்னும் சிலகாலத்தில் இசை துறையை பெருமளவில் சிதறடிக்கும் என்றே பயபடுகிறேன்  TMS , பாலமுரளிகிருஷ்ணா, TL.மகாராயன் , யேசுதாஸ் , spb , ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன் , சுசிலா, ஸ்வர்ணலதா, சித்ரா, யானகி,சுஜாதா  என பல சாதனை பாடகர்களை உருவாகிய தமிழ் cenima விற்கு இன்று நடிகர்கள் தான் பாட  வேண்டும் என்ற அவசியம் என்ன?

இன்று கூட கார்த்திக், ஹரிசரண் , ஹரிஸ்ரகவேந்திரா, விஜயபிரகாஷ்,சின்மயி,சுசித்ரா   என பல வளர்ந்து வரும் திறமை மிக்க பாடகர்களுக்கு மத்தியில் தனுஸ் பாடவேண்டிய அவசியம் என்ன?


இந்த நிலை தொடந்தால் பாதிக்க படபோவது முழுக்க முழுக்க இசை துறையே இபோதே இலத்திரனியல் குரல் முறைகள் வந்து உண்மையான பாடகனை ஒதுக்க ஆரம்பித்து விட்டது இனி தங்கள் தங்கள் படத்தில் தாமே பாடுவது என சிம்பு தனுஸ் கூட்டணியில் மற்றவர்களும் இணைந்தால் பாடகனுக்கு வேலை இல்லாமல் போய்விடும் அதைவிட முக்கியமாக சங்கீதம் செத்துவிடும் பலபல சங்கதிகள் ஆலாபனைகள் என தவழ்ந்துவந்த சங்கீதம் இனி எட்டபோகும் நிலை என்ன?

நான் நடிகர்களை பாடவேண்டாம் என கூறவில்லை அதைவிட சங்கீத சுவைமிக்க பாடல்களை நல்ல பாடகர்கள் பாட இவர்கள் வழிவிட வேண்டும் என்றே கேட்டுகொள்கிறேன் ......

Monday, December 19, 2011

Advice..

இன்று என்ன தான் விலைவாசி உயர்ந்தாலும் advice விலை மட்டும் கூடவில்லை சொல்லபோனால் முன்பை விட அதிகமாக free ஆகவே கிடைகிறது.
சிறியவர் முதல் பெரியவர் முதல் advice

காலையில் late ஆக கண் விழித்தால் அம்மா advice
Night ல வீட்டுக்கு வர late ஆனா அப்பா advice
போன் ல அதிக நேரம் பேசினா அண்ணா  advice
Road ல சுத்துரத பார்த்தா அக்கா advice
school போனால் teacher advice
Examல marks குறஞ்சா தம்பி கூட advice
சரி என்று friends கிட்ட போனா late என்று அவங்களும் advice
இது கூட பரவாயில்ல சில நேரம்
கண் தெரியாதவன் கனவை பற்றி advice
காது கேட்காதவன் கானம்  பற்றி advice
வெட்டியா இருகிறவன் உழைப்பை பற்றி advice
வீணா போனவன் life பற்றி advice
முட்டாள் படிப்பு பற்றி advice
முடவன் நடனம் பற்றி advice
குடிகாரன் சமூகத்த பற்றி advice
குடிக்காதவன் போதைய பற்றி advice
காதலிகாதவன் காதல் advice
காதலிச்சவன்   மாயை  advice
இப்படி சொல்லிட்டே போகலாங்க........
தாங்க முடியல்ல
என்ன தான் பண்றது
எல்லாத்தையும் ௭வளவு காலம் தாங்க கேட்டுடு இருக்கிறது
advice பண்றது சுகம் ஆனால் அதை செய்யிரத விட கேக்கிறது ௭வளவு கஷ்டம் என்று ஏன் யாருக்கும் புரியல்ல
please இத படிசிட்டு நல்லா தானே இருந்தா என்ன ஆச்சு என்று யாரும் advice பண்ணிடாதீங்க
plz plz ........  



 
  

Friday, December 16, 2011

வேகம்

இந்த வேகத்தால் நாம் கண்டதென்ன....
கடந்த 13 .12 .2011 அன்று வடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் இடம்பெற்ற மோசமான கோர விபத்து கண்களை நெருட வைக்கிறது 21 வயதான இரு வாலிபர்களின் வாழ்கையை பறித்தது தன் மிக கொடுமை 

நெருக்கடியை குறைக்க அகலிக்கப்பட்ட வீதிகள் நம் வரைமுறையற்ற வேகங்களால் மயானங்களாகின்றன
ஓரிரு நிமிடத்தை சேமிக்க எண்ணி ஒரு வாழ்க்கை பறிபோனது தான் பரிதாபம்
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வதில்லை
ஆனாலும் இத்தகைய சம்பவங்கள் இனியும் நடக்காது பார்த்து கொள்ள வேண்டியது அவர் அவர் கைகளில் உள்ளது  
பெறுமதி மிக்க இந்த மனித பிறவி எடுத்த நாம் அதனை தேவையற்ற வேகத்தால் பாழடித்து நமக்கும் நம் சார்ந்தவர்களுக்கும் துன்பத்தை தருவதை தவிர்ப்போம்
அத்துடன் இறந்து போன சக நண்பன் பார்த்தீபனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் ....

Thursday, November 24, 2011

மழைப்பாடம்...

செந்நிற கதிர்களுடன் சூரியன் கிழக்கு திசையை வர்ணமாக்குகிறான் பொழுது புலர்ந்ததை சேவல்கள் தம் மேல் ஸ்தாயி ஆலாபனைகள் மூலம் உறுதிபடுத்துகின்றன அதற்கு இசையுமால்  போல் மரங்கள் தளிர் தாளம் போடுகின்றன வழமையான சுறுசுறுப்புடன் மனிதர்களும் இயங்க ஆரம்பிகிறார்கள்

வானிலையில் சின்ன மாற்றம் வானத்தின் வண்ணத்தை கருமை சூழ்கிறது ஏகாந்தம் மயானத்துக்கே சவால் விடுமாப்போல் உள்ளது மரங்கள் மந்திரித்த சிலைகளாக நிக்கின்றன பறவைகள் முகாம் தேடி தஞ்சம் புகுகின்றன கருமேகம் மெல்ல மெல்லிசை இசைகிறது இடி அதை துள்ளிசையாக மாற்றுகிறது மின்னல்கள் வானின் மார்பை கிழித்து மழையின் வேகத்தை கூட்டுகின்றன மலை சோவென பொழிகின்றது 

இடி ஒலிகள் தொலை காட்சிகளுக்கும் ஓய்வு கொடுக்கின்றன மின்னல் அலைகள் தொலைபேசி அலைகளை தூர போட சொல்கின்றன கருமேகம் மின்சார விளக்கை ஏத்த வழிகோலுகிறது

வெள்ளம் தரை புரண்டு ஓடுகிறது குளிர்மை யாழ்ப்பாணத்தையும் மலை நாடாக்கி மகிழ்கிறது மரங்கள் அமைதியை குலைத்து ஆக்குரோசமாக ஆடுகிறான சாலைகள் வெறிச்சோடுகின்றன மனிதர்கள் வீடுகளுக்குள் முடங்குகிரார்கள் வேலைகள் கெடுகின்றன குடை இன்றி வந்தவர்கள் இடமின்றி தவிக்கின்றனர் கூட்டமாக விளையாடிய சிறுவர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர்

நானும் நினைப்பேன் இந்த வெயிலை தங்கமுடியாதுள்ளது என்று மழையையும் தாங்க முடியவில்லை தான்  
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை 
இது தான் இன்றைய மழையில் நான் கண்ட அனுபவம்

Sunday, November 20, 2011

எங்கு செல்கிறது srilanka கிரிக்கெட் ...

உலககின்னத்தில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டி வரை தெரிவான அணிக்கு இன்று நடந்தது என்ன............
பாகிஸ்தான் அணியுடனான நேற்றைய ஒருநாள் போட்டியில் 76 பந்துகளில் 46 ஓட்டங்களைபெறவேண்டி இருந்த அணி  7 விக்கெட்களை வெறுமனே 19 ஓட்டங்களுக்கு இழந்தது தான் வேதனை

போட்டியை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் தமது பங்கை சிறப்பாக வெளிபடுத்திய போதும் துடுப்பாட்டம் மோசமாக அமைந்தது தான் தோல்விக்கு காரணம் குறிப்பாக சங்கா மஹேல தவிர யாரும்
சோபிக்கவில்லை என்று தான் கூற முடியும்

 டில்ஷான் அணித்தலைவராகவும் சரி ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் சரி சொதப்பி வருகிறார் தரங்க ஆரம்பங்களை பெறுகிறார் ஆனால் தொடரமுடியாது தடுமாறுகிறார் சந்திமால் மத்தியூஸ் போன்ற இளம் வீரர்கள் போர்ம் இன்றி தவிக்கிறார்கள் திசர பெரேரா powerplay யில் மட்டும் ஓட்டம் பெறுகிறார்

இவ்வாறான நிலையினை தடுத்து நிறுத்துவது அனைத்து வீரர்களினதும் கடமை ஆகும் அனைவரும் அணியில் தமக்கான பங்கினை சிறப்பாக செய்ய வேண்டும் இல்லாவிடில் மற்றைய விளையாடுகளை போல் கிரிக்கெட்டிலும் இலங்கை பின்னோக்கி தள்ளப்படும் அதை தவிர்க்க இனி வரும் தொடர்களில் வீரர்கள் சிறப்பாக செயற்பாடுவார்கள் என நம்புகிறேன் இலங்கை ரசிகர்கள் அனைவரும் அதையே ௭திர்பார்கிரர்கள் ...

Friday, November 18, 2011

மனிதநேயம்

மனிதம் என்பது  மகோன்னதமான  ஒரு உணர்வு இந்த உலகத்தில் சுய சிந்தனை உள்ள ஒரே உயிர் மனிதன்.
ஆனால் இன்று மனித நேயத்துக்கு என்ன நடந்தது மதம் பிடித்த மனங்களின் ஓரத்தில் கூட அவை வாழ்கின்றதா? என்று தெரியவில்லை மனிதனை மனிதன் நேசிக்காவிட்டாலும் மற்ற உயிரும் உணர்வுள்ளது என்ற எண்ணம் கூட அழிந்து விட்டது தான் வேதனைக்குரியது

சுயநலம் எமது சமூகத்தின் சின்னமாகிவிட்டது அனைத்தையுமே தனக்காகிகொள்ளும் உணர்வு நம்மிடம்  ஊன்றி விட்டது ஆனால் இறக்கும் போது நெருப்பு தின்ன நமது உடல் மட்டுமே உண்டு என்பது மறந்து போய் விடுகிறோம் சமூகத்தின் உயர்வான பக்கங்களை பார்த்து பொறாமை படுகிறோம் ஆனால் துன்பத்தில் மறைந்த பக்கங்களை புரட்டாமலே  விட்டு விடுகின்றோம்

ஆலயங்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவிடுகிறோம் அநாதைகளை அப்படியே விட்டு விடுகிறோம் அன்னதானம் என்னும் பேரில் உறவுகளுக்கு விருந்தளிகிறோம் ஆனால் அரை வயிற்ருடன் வாழும் வறியவனை வாட்டுகின்றோம் அடுத்தவன் துன்பத்தில் இன்பம் காண்கிறோம் அதே துன்பம் எம்மை சூழும் போது மனம் உடைக்கிறோம்

எமது நேரத்தில் பலதை அடுத்தவனை பற்றி பேசி களிக்கிறோம் அவன் நம்மை பேசினால் போர் கொடி தூக்குகிறோம் புதுமை செய்பவனை புன்னாக்குகிறோம்  பழமை பேசுபவனை பைத்தியகாரன் ஆக்குகிறோம் உழைக்காதவனை வெட்டி என்கிறோம் அதிகமாக உழைபவனை நப்பி என்கிறோம்

இவ்வாறு இன்று மனித நேயம் சிதைவடைந்து செல்கிறது.... நிபந்தனையுடன் வாழும் இந்த உலகில்
இதை சொல்லும் நீ உயர்ந்தவனா என என்னை யாரும் கேட்க வேண்டாம் எனது மனித நேயமும் இதே நிலையில் தான் வாழ்கிறது என்பதையும் வாய் கூசாமல் ஒப்புகொள்கிறேன்....

Tuesday, November 15, 2011

யாரோடு நோவேன்

இன்று  அனைத்தும் கணணி மயமாக்கபட்டுள்ளது உலகம் இணையத்துக்கு பாத பூஜை செய்கிறது. கனவுகளும் கற்பனைகளும் இன்று கணணி திரைக்குள் அகப்பட்டு விட்டன.
youtube இன்று தாலட்டு பாடுகிறது.
 சிறுகுழந்தையும் இன்று chating செய்கிறது.  இளைஞர் காதல்கள் இன்று facebook கில் மலர்கின்றன signout செய்ய முன் அவை உதிரவும் செய்கின்றன

இத்தகைய ஒரு நவ நாகரிக மாற்றம் நமக்கு தந்ததும் பல பறித்ததும் பல......

நம் கலைகள் இன்று மலையேறி விட்டன கலாச்சாரங்கள் இன்று கற்பழிக்க படுகின்றன பக்தி பூர்வமாக நடக்க வேண்டிய பூஜைகள் திருவிழாக்கள் இன்று தெரு விழாக்களாக மாறி உள்ளன ஆலயங்கள் வெறிச்சோடி உள்ளன சினிமா அரங்குகளில் பக்த கூட்டம் அலை மோதுகிறது

விளையாட்டு மைதானங்கள் வெறுமனே வாடுகின்றன ஆகாய வெளி பட்டங்களுக்காக காத்திருக்கிறது. அண்ணன் அக்கா மாமன் மச்சான் என்று நடக்க வேண்டிய திருமணங்கள் முகூர்த்த நேரத்தில் முகம் காட்டும் உறவுகள் முன் நடக்கின்றன

கல்விக்கு முக்கியம் கொடுத்த சமூகம் இன்று வண்ணம் மாற்றி உள்ளது மாணவர்களுக்கு கல்வி ஒரு parttime job ஆக மாறியுள்ளது notes book கைவிட facebook முக்கியமாகி விட்டது 


இந்த நிலை தொடர வேண்டுமா? காலத்தின் மாற்றங்களை நான் எதிர்கவும் இல்லை மறுக்கவும் இல்லை ஆனால் அந்த மாற்றம் எம் கலை கலாச்சாரம் ஒற்றுமை விழுமியங்களை அளிக்காது பாதுகாக்க வேண்டியது நம் எல்லோரதும் பொறுப்பு என்பதை மட்டும் ஞாபகபடுதுகிறேன்

முதல் பூ ....

கற்பனைக்கு நான்
கருவுறவில்லை
கனவுகளுக்கு நான்
வண்ணமிடவில்லை
காலங்களுக்காக நான்
கலங்கவில்லை
கோலங்களை கண்டு நான்
கோவிக்கவில்லை   
புயல்கள் என்னை
புண்ணாக்கவில்லை
பூகம்பம் என்னை
மன்னாக்கவும் இல்லை
உதிரும் போதும்
உண்மைக்காக உதிர்வேன் ......