Thursday, November 24, 2011

மழைப்பாடம்...

செந்நிற கதிர்களுடன் சூரியன் கிழக்கு திசையை வர்ணமாக்குகிறான் பொழுது புலர்ந்ததை சேவல்கள் தம் மேல் ஸ்தாயி ஆலாபனைகள் மூலம் உறுதிபடுத்துகின்றன அதற்கு இசையுமால்  போல் மரங்கள் தளிர் தாளம் போடுகின்றன வழமையான சுறுசுறுப்புடன் மனிதர்களும் இயங்க ஆரம்பிகிறார்கள்

வானிலையில் சின்ன மாற்றம் வானத்தின் வண்ணத்தை கருமை சூழ்கிறது ஏகாந்தம் மயானத்துக்கே சவால் விடுமாப்போல் உள்ளது மரங்கள் மந்திரித்த சிலைகளாக நிக்கின்றன பறவைகள் முகாம் தேடி தஞ்சம் புகுகின்றன கருமேகம் மெல்ல மெல்லிசை இசைகிறது இடி அதை துள்ளிசையாக மாற்றுகிறது மின்னல்கள் வானின் மார்பை கிழித்து மழையின் வேகத்தை கூட்டுகின்றன மலை சோவென பொழிகின்றது 

இடி ஒலிகள் தொலை காட்சிகளுக்கும் ஓய்வு கொடுக்கின்றன மின்னல் அலைகள் தொலைபேசி அலைகளை தூர போட சொல்கின்றன கருமேகம் மின்சார விளக்கை ஏத்த வழிகோலுகிறது

வெள்ளம் தரை புரண்டு ஓடுகிறது குளிர்மை யாழ்ப்பாணத்தையும் மலை நாடாக்கி மகிழ்கிறது மரங்கள் அமைதியை குலைத்து ஆக்குரோசமாக ஆடுகிறான சாலைகள் வெறிச்சோடுகின்றன மனிதர்கள் வீடுகளுக்குள் முடங்குகிரார்கள் வேலைகள் கெடுகின்றன குடை இன்றி வந்தவர்கள் இடமின்றி தவிக்கின்றனர் கூட்டமாக விளையாடிய சிறுவர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர்

நானும் நினைப்பேன் இந்த வெயிலை தங்கமுடியாதுள்ளது என்று மழையையும் தாங்க முடியவில்லை தான்  
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை 
இது தான் இன்றைய மழையில் நான் கண்ட அனுபவம்

No comments:

Post a Comment